Archive for ஒக்ரோபர் 20, 2007
ஜீவஜோதியா கொக்கா…
ஜீவஜோதி வீட்டில் சூறையாடிய வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்ததால் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் ஜீவஜோதி, தனது முதல் கணவர் சாந்தகுமாருடன் வசித்து வந்தார். “ஓட்டல் அதிபர் ராஜகோபால் அடி ஆட்களுடன் தனது வீட்டிற்கு வந்து பொருட்களை சூறையாடி சென்றார் தனது கணவரையும் கொலைசெய்தார் ‘ என்று வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜீவஜோதி புகார் கொடுத்தார். ராஜகோபால் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறுதி வழக்கு விசாரணையில் சாட்சிகள் பல்டி அடித்தத்தார்கள்.. ஜீவஜோதி உட்பட.. இராஜகோபால் இன்று ராஜாமாதிரி வெளிவந்தார்..
ஜீவஜோதி பணத்திற்கு ஆட்பட்டுவிட்டாரா..? போராடியது போதும் என்று சோர்ந்துவிட்டாரா அல்லது மிரட்டலுக்கு பயந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. நீதி செத்துவிட்டது என்பது மட்டும் கண்கூடு.. மதுரையை எரித்தாளாம் கண்ணகி. அது எல்லாம் வேண்டாம் தாயீ. அட்லீஸ்ட் ஒன்றாக வாழ்ந்தவனின் உயிர் போனதுக்கு அறிந்தோ அறியாமலோ நீதான் காரணம். அந்த உணர்ச்சிகூட இல்லாம போச்சு உனக்கு.. நல்லா இரு..
Mac, PC க்குமான வித்தியாசம்..:D
A PC comes stuffed with software you’d never want to use.
A Mac comes with the stuff you want. 😛