நச்சென்று ஒரு ‘பட்டறை’

ஓகஸ்ட் 5, 2007 at 3:20 பிப பின்னூட்டமொன்றை இடுக

வழக்கமாக இரவு லேட்டாக தூங்கி பழகிய நான் நேற்று 11 மணிக்கே தூங்கபோனேன்.. காரணம் சீக்கிரம் வலைப்பூ பட்டறைக்கு போகவேண்டும் என்ற எண்ணம்தான். ஒருவழியாக விரைவாகவே வந்துவிட்டேன்.. நான் வந்த வேளையில் ஒருசிலர்தான்.

இதுவரை வலைப்பூ பதிவர்களில் லக்கி, பாலா அண்ணா தவிர யாரும் தெரியாது. பெரும்பாலும் போட்டோகளில் பாத்திருப்பதுதான். சிலரை கண்டுக்கொண்டேன். பலர் புதுமுகங்கள். எல்லோரிர்டமும் இருந்த முக்க்கிய விடயம் அனைவருமே விழுந்தடித்துக்கொண்டு வேலை செய்ததுதான். எவருமே ஏனோ தானோ இருந்ததாக நான் கவனிக்கவில்லை. உண்மையில் பெருமையாகதான் இருக்கிறது.

நான், இவான் மற்றும் ராஜா ஆகியோர் வரவெற்பு கூடவே வருகைதரும் பதிவர்களின் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் வேலையை செய்தோம். இதனால் ஒரு சின்ன லாபம் எனக்கு. யார் யார் என்று இலகுவாக் அடையாளம் காண முடிந்தது…:)

கலக்கல்கன்னியப்பன்களாகவந்த சேர்ந்த வாவாசங்கம் என் வாயை பிளக்க வைத்தார்கள்.. அடபாவிகளா.. என்னய்யா நடக்குது ஊருக்குள்ள..அதிருதுல்ல என்று சொல்லாதுதான் பாக்கி…

பொதுவாக நான் தீவிர வலைப்பதிவர் இல்லை. ஆனால் இவர்களை எல்லாம் கண்டபிறகு மனதில் ஒரு ஆசை வரத்தான் செய்கிறது. என்னுடைய பழைய பதிவுகளை திரும்பி பார்த்தால் ….:( பலர் சின்ன வயதில் பலர் கலக்கலாய் இருப்பது மகிழ்ச்சி..

டோண்டு சார் வந்தபோது ஏனோ மனதில் போண்டா பதிவு வந்து தொலைந்துவிட்டது.. என்ன கொடும சார் இது..?

மேலும்சென்னைபல்கலைக்கழகமாணவர்களும் இதில்ஆர்வமுடன்கலந்துகொண்டதுநல்லவிசயம்..வயதில் மூத்தவர்களும், இளைஞ இளைஞிகளும் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.. தமிழின் புதிய இணைய உலகம் மெல்ல விரிகிறது.. தமிழ் மெல்ல அழியும் என்ற பேச்சு எல்லாம் தேவையில்லாத பயம் போலதான் எனக்கு தோன்றுகிறது..

இக்கருத்தரங்கைவெற்றிகரமாகநடத்தியநண்பர்களுக்குவாழ்த்துக்கள்..

Entry filed under: பதிவர் உலகம்.

நான் ஏன் சீரியஸ் பதிவு போடவேண்டும்.? சாட்சாத் நம்ம நேரு மாமாவேதான்..


ஓகஸ்ட் 2007
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031